எல்லோரும்
மறந்து போனார்கள்
இல்லை
மரித்து போனார்கள்
கத்தி கத்தி
ஓய்ந்து போய்
அந்த கொடூரத்தை
காண சகிக்காமல்
கொத்தாய்
விழுந்த குண்டுகள்
ரத்தம் குடித்த
தொலைக்காட்சி பதிவுகளை
பள்ளிகுழந்தைகள்
பதுங்குகுழிக்குள்
புத்தகபையோடு
உயிரிழந்து கிடந்த
செய்தி தாள்களை
எல்லோரும்
மறந்து போனார்கள்
இல்லை
மரித்து போனார்கள்
சொந்த மண்ணில்
சோற்றுக்கு அலைந்து
வழிதெரியாத காட்டில்
வாழ்க்கையை தொலைத்தபோது
கண்ணெதிரே சொந்தங்கள்
கற்பிழந்து
தெருமுற்றத்தில்
காகிதமாய் கழிந்தபோது
வெட்டவெளி சிறைசாலையில்
சொந்த நாட்டில்
அகதியெனும் சொல்
பிறந்த பொழுது
எல்லோரும்
மறந்து போனார்கள்
இல்லை
மரித்து போனார்கள்
No comments:
Post a Comment