நீ
எங்கே இருக்கிறாய்
என்
கவிதைகளின் பயணம்
வார்த்தைகளின்
பற்றாகுறையால்
பாதியிலே நிற்கிறது ...........
எந்த பேருந்தில்
ஏறினாலும்
உனக்கும்
ஒரு டிக்கெட்
சேர்த்தே எடுக்கிறேன் .....
மழையில்
நீ குடைபிடித்து
நடக்கிற அழகை பார்த்தால்
கவிதை
தன்னை தானே எழுதி கொள்ளும் .........
உன்
தெருவின் நீளத்தில்
என் காதல்
தன்
தேசத்தை தேர்ந்தெடுத்து கொண்டது .........
ஊருக்குள்
தெரு
ஆனால்
நீ
தெருவில் நடந்தால்
தெருவுக்குள் ஊர் ...............
ஓர கண்ணால்
நீ
பார்க்கிற அழகை பார்க்க
நிச்சயம்
இரண்டு கண் போதாது ............
நீ
எந்த போட்டியில்
கலந்து கொண்டாலும்
என்னை பொறுத்தவரை
அது கவிதை போட்டி தான்........
No comments:
Post a Comment