Wednesday, September 1, 2010

தீராத பொழுதுகள்

கனவில்
உன்னோடு பேசுவதை
நினைத்து நினைத்தே
கழிகிறது
பகல் பொழுது ..........

வாடாத பூக்கள் ...

உனக்காய் எழுதிய
முதல் கவிதை
எந்த திருத்தமுமின்றி
அப்படியே இருக்கிறது
உன்னை போல அழகாய்...............

எது கவிதை

ஒன்றுக்கு
இரண்டுமுறை
இரண்டுக்கு
மூன்றுமுறை
மூன்றுக்கு
நான்குமுறை படித்தும்
நகம்கடிக்க செய்தால்
அதுதான் கவிதை .....

இந்த
நகக்கடி கவிதைகள்
கொசுகடியை காட்டிலும்
அதிகம் கடிக்கிறது ......

அறிவுஜீவிகளே
உங்களை
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

எங்கள்
பாமர கூட்டத்திற்கு
தெளிவுரை தேவைப்படுகிறது

உங்கள் தெளிவுரைக்கு
மீண்டும் ஒரு விளக்கவுரை
தேவைபடாதென்று நம்புகின்றேன் ....