Wednesday, September 1, 2010

எது கவிதை

ஒன்றுக்கு
இரண்டுமுறை
இரண்டுக்கு
மூன்றுமுறை
மூன்றுக்கு
நான்குமுறை படித்தும்
நகம்கடிக்க செய்தால்
அதுதான் கவிதை .....

இந்த
நகக்கடி கவிதைகள்
கொசுகடியை காட்டிலும்
அதிகம் கடிக்கிறது ......

அறிவுஜீவிகளே
உங்களை
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

எங்கள்
பாமர கூட்டத்திற்கு
தெளிவுரை தேவைப்படுகிறது

உங்கள் தெளிவுரைக்கு
மீண்டும் ஒரு விளக்கவுரை
தேவைபடாதென்று நம்புகின்றேன் ....

2 comments:

  1. மாதவராஜ் வழியாக இங்கு வந்தேன். எதுகவிதை என்று நான் எழுதியிருப்பதும் ஒரு காரணம். படித்துப்பாருங்கள்:http://ezuthovian.blogspot.com/2010/02/blog-post.html

    ReplyDelete