Monday, June 14, 2010

இது புரியாத கவிதை அல்ல...புது கவிதை

அழகன்
பெற்றெடுத்த
ஒரு
அழகி ....

இல்லை
இல்லை

அழகி
பெற்றெடுத்த
ஒரு
பேரழகி ...

இங்கு
ஒரு
கேள்வி எழலாம்?

அழகியா
இல்லை
பேரழகியா ....

இளவழகன்
தூக்கி
கொஞ்சுகிறபோது
அழகி ...

இளவழகன் மனைவி
தூக்கி
கொஞ்சுகிறபோது
பேரழகி ...

ஒவ்வொரு
குழந்தையும்
ஒரு புத்தகம்
வரிக்கு வரி
வாசியுங்கள் ......

ஒவ்வொரு
குழந்தையும்
ஒரு வானம்
உங்கள்
சிறகுகளை
தேடி கண்டுபிடியுங்கள் .......

குழந்தையோடு
விளையாடுகிறபோது மட்டும்
யாருக்கும்
வியர்ப்பதில்லை
முடிந்தளவு விளையாடுங்கள் .....



உங்கள்
குழந்தை நிலவு
ரசித்து போன
நட்சத்திரங்களில்
நானும் ஒருவன் ....

ஒரு
குழந்தைக்கான கவிதை
வார்த்தைகளையும் தாண்டி
ஏதோ
ஒன்றில் தொடங்கி
ஏதோ
ஒன்றில் முடிகிறது ...

அது
எதுவாய்
வேண்டுமானாலும்
இருக்கலாம் ...

தெரிந்தால்
சொல்லுங்கள்
தெரியாமல் இருந்தால்
உங்கள் குழந்தை
உங்களுக்கு
சொல்லிக்கொடுக்கும் ...........

அன்புடன்
அசோக் .......

1 comment: