Saturday, December 5, 2009

இது தேவதை கதை அல்ல கவிதை

உன்னை
தேரடி வீதியில் தான்
முதல் முதலில்
பார்த்தேன் ....
அன்று முதல்
அது எனக்கு
தேவதை வீதி....

உண்மையிலே நீ ஒரு ஒரிஜினல் பீஸ் தெரியுமா .........

ஊருக்குள்
தெரு.....
ஆனால் நீ
தெருவில் நடந்தால்
தெருவுக்குள்
ஊர்.....

Wednesday, December 2, 2009

அன்பே நீ ....

கம்பன்
பாரதி
ஷெல்லி
மில்டன்
எல்லோரும்
கவிதை ஆனார்கள் ...
உன்
பெயர் இடபட்ட
என்
கவிதை புத்தகத்தில் .....

மை மழையாகிறது

மின்னல் எடுத்த
புகை படத்தில்
கடவுள்
கண்டபடி
கையெழுத்து போடுகிறார். .........