Friday, January 29, 2010

வாழ்த்து

உள்ளத்திலிருந்து
உளறுகிறேன்
இத்திங்களிலிருந்து
உங்களுக்கு நான் அடிமை .......

வாழ்த்து

வாழ்த்தொன்று எழுதி வணங்கி வருவோரின்
கால்தொடவே கரைந்த துநெஞ்சம்

வாழ்த்தொன்று எழுதி வணங்கி வாழ்த்த வருவோரின்
கால்தொடவே துடிக்கிறது என் நெஞ்சம்

Saturday, January 2, 2010

பூவே

நீ காற்றாக மாறிய காரணம்

புரியாமல் தவிக்கிறேன்

நெஞ்சில் ஓர் ரணம் ...........

மாயங்கள் உலகில் இல்லையடி - நீ

மந்திரத்தின் மூத்த பிள்ளையடி

உன் கற்பனைக்கு முன்பு

கவிஞனும் தோற்று போவான்

உன் கால் கொலுசொலி கேட்டால்

கேட்டவன் கவிஞன் ஆவான் ............

உன் நெஞ்சில் என்ன மாயம்
சொல் நெஞ்சே
உன் கண்ணில் என்ன காயம்
சொல் கண்ணே
மௌன வார்த்தை
பூக்காதே
மனம் பேசும் வார்த்தை
கேட்காதே
சிரித்துபேசும் தென்றல் - நீ
சிரித்தால்
நின்று பார்த்து போகும்
கலைந்து போகும் மேகம் - நீ
பார்த்தால்
கூடி வந்து மழையாகும்............

கட்டி தழுவியபோது
கைகள் கவசம் ஆனதடி
கண்ணீர் துளிகள் பட்டு
தோள்கள் கரைந்து போனதடி .....
என் தோளும் மார்பும்
தோழமை பேசுமடி - நீ
தங்கி போன இதயத்தில்
தமிழ் வாசனை வீசுமடி ...........

Friday, January 1, 2010

கண்ணே ஏன் நீ கலங்குகிறாய்

கண்ணீர் கொண்டு ஏன் நீ முகம் கழுவுகிறாய்

யாரும் உன்னை தீண்ட வந்தால்

திரும்பி பாரடி நான் இருப்பேன் - உயிர்

தீரும் வரைக்கும் உன் நிழலாய் - நீ

திரும்பும் திசையில் நான் நடப்பேன்

காதல் பெண்ணே

கவிதை எழுதும் உன் கண்கள்

கண்ணீர் எழுத கூடாதடி - நீ

கண்ணீர் எழுத கண்டால்

காற்றும் நிலவும் தூங்காதடி.........

நீ ஓடோடி வந்ததை கண்டு

உயிர் கூத்தாடி போனதடி

மார்போடு முகம் புதைக்க

மனம் காத்தாடி ஆனதடி .....

வரம் கொடுக்கும் தேவதை உனக்கு

சாபம் கொடுத்தது யாரு

வாடிய பூவை கையில் எடுத்து

வாழ்கைய படித்து பாரு

நான் இருப்பேனே

உன்னை

என் தோள் சுமப்பேனே

நீ நடக்க

நீ சிரிக்க

அந்த அழகை

பார்த்து கிடப்பேனே

என் பொன் மானே ..............

பூவென பூக்கும் உன் விழியில்

கண்ணீர் காவியம் எழுதியதேன்

புன்னகை பூக்கும் உன் உதடு

எரிகிற தீயாய் உருகியதேன்...........

நிழலாய் உன்னுடன் நான் இருப்பேன்

நெஞ்சிலும் மார்பிலும் உன்னை சுமப்பேன்

உன் கண்ணில் நீர் கண்டால்

கைக்குட்டை ஆகிடுவேன் .........

இருட்டுக்குள் எதை நீ தேடுகிறாய்

இதயத்தில் எதையோ மூடுகிறாய்

நடந்ததை எல்லாம் மறந்து விட்டால்

நாளை நடப்பது சுகமாகும் ..............

உயிரே பூங்காற்றே

நிலவே பூங்கனவே - உன்

வாழ்வில் என்ன சோகம் - ஏன்

வாடி போனது தேகம் ..................

நான் என்ன உன்னை

விட்டு விட்டா போவேன்

விட்டு விட்டால் சாவேன்

என் வாழ்வே நீ வா .....................

கடலும் அலையும்

பிரியும் தேதி பிரிவோம் - அதுவரை

ஒன்றாக திரிவோம்

என் கனவே நீ வா .......

மாயம் கண்டு மயங்காதே

காயம் கண்டு மருகாதே

சோகம் உன்னை சேராமல்

பார்த்து கொள்வேன் கலங்காதே .........

நான் தானே

கண் திறந்து பாரடி ...

கண்ணீர் ஏனடி ....

நான் தானே

உன் எதிரில் இருப்பது.......

உன் நிழலாய் நடப்பது ........

நான் தானே

தோள்கள் எதற்காய் வாங்கி வந்தேன் - நீ

தோள்சாய தானே ....

மார்பை கூடாய் மாற்றி வைப்பேன் - நீ

குடியேறு மானே .......

இரவையும் நிலவையும் பிரித்து விட்டால்

கவிதையும் காதலும் இறந்து விடும்

இனிமையும் தனிமையும் விலகி நின்றால்

கண்களில் கண்ணீர் பிறந்து விடும் .........