Saturday, January 2, 2010

உன் நெஞ்சில் என்ன மாயம்
சொல் நெஞ்சே
உன் கண்ணில் என்ன காயம்
சொல் கண்ணே
மௌன வார்த்தை
பூக்காதே
மனம் பேசும் வார்த்தை
கேட்காதே
சிரித்துபேசும் தென்றல் - நீ
சிரித்தால்
நின்று பார்த்து போகும்
கலைந்து போகும் மேகம் - நீ
பார்த்தால்
கூடி வந்து மழையாகும்............

கட்டி தழுவியபோது
கைகள் கவசம் ஆனதடி
கண்ணீர் துளிகள் பட்டு
தோள்கள் கரைந்து போனதடி .....
என் தோளும் மார்பும்
தோழமை பேசுமடி - நீ
தங்கி போன இதயத்தில்
தமிழ் வாசனை வீசுமடி ...........

No comments:

Post a Comment