பூவென பூக்கும் உன் விழியில்
கண்ணீர் காவியம் எழுதியதேன்
புன்னகை பூக்கும் உன் உதடு
எரிகிற தீயாய் உருகியதேன்...........
நிழலாய் உன்னுடன் நான் இருப்பேன்
நெஞ்சிலும் மார்பிலும் உன்னை சுமப்பேன்
உன் கண்ணில் நீர் கண்டால்
கைக்குட்டை ஆகிடுவேன் .........
இருட்டுக்குள் எதை நீ தேடுகிறாய்
இதயத்தில் எதையோ மூடுகிறாய்
நடந்ததை எல்லாம் மறந்து விட்டால்
நாளை நடப்பது சுகமாகும் ..............
No comments:
Post a Comment