Friday, November 27, 2009

மா வீரர் கதை படிப்போம்

இந்த மா வீரர் நாளில்
நாம் மா வீரர் கதையை படிப்போம் ...

அடுத்த மா வீரர் நாளில்
அந்த___________கதையை முடிப்போம் .....

காலம் வரும்
அதுவரை நாம் பொறுத்திடுவோம் .........

ஈழம் வரும்
ஈழ மண்ணில் சேர்ந்து சிரித்திடுவோம்

வாழ்க தமிழ்..
வளர்க தமிழ் உள்ளம்.




Wednesday, November 25, 2009

நடத்துங்கள் நடத்துங்கள் இது உங்கள் நாடு

காதலர்கள் வந்தார்கள்
காதலித்தார்கள்
தங்கள் ஆடைகளை
சரி செய்து கொண்டார்கள் ....

தாசிகள் வந்தார்கள்
தவம் இருந்தார்கள்
வரம் கொடுக்க
வாலிபர்கள் கூட்டம் ...........

காவல் துறை வந்தது
கட்டு பாடு என்றது
மந்திரி மகன் என்றதும்
மவுனமாய் சென்றது .......

பொது மக்கள் வந்தார்கள்
சீ என்றார்கள்
சினிமாவை திட்டிவிட்டு
சீக்கிரம் வீடு போய் சேர்ந்தார்கள் .....

ஒன்று மட்டும் சொல்கிறேன்
அன்று
மெரினா கடல்
இன்று மெத்தை..................