காதலர்கள் வந்தார்கள்
காதலித்தார்கள்
தங்கள் ஆடைகளை
சரி செய்து கொண்டார்கள் ....
தாசிகள் வந்தார்கள்
தவம் இருந்தார்கள்
வரம் கொடுக்க
வாலிபர்கள் கூட்டம் ...........
காவல் துறை வந்தது
கட்டு பாடு என்றது
மந்திரி மகன் என்றதும்
மவுனமாய் சென்றது .......
பொது மக்கள் வந்தார்கள்
சீ என்றார்கள்
சினிமாவை திட்டிவிட்டு
சீக்கிரம் வீடு போய் சேர்ந்தார்கள் .....
ஒன்று மட்டும் சொல்கிறேன்
அன்று
மெரினா கடல்
இன்று மெத்தை..................
No comments:
Post a Comment