Sunday, June 13, 2010

காதல் கவியரங்கம்

எனக்கு
அன்னம் இட்டது
திரை அரங்கம்
ஆளாக்கி விட்டது
கவி அரங்கம்

எதை
பாடசொன்னாலும்
காதல் பாடுகிறவனை
காதலை
பாட சொன்னால் ?

எல்லோரும்
காதலிக்கிறார்கள்
ஆனால்
ஒரு சிலர் தான்
கவிதை எழுதுகிறார்கள்

முதல்
காதலும்
முதல்
கவிதையும்
ஒருவன்
தனக்கு தானே
எழுதிக்கொள்ளுகின்ற
கடிதங்கள்

நிறையபேர்
வாழ்கையில்
கடிதங்கள்
பிரிக்கபடாமலே
கிழிக்கப்படுகின்றன ............

காதல்
இசை
காது உள்ளவர்கள்
கேட்டு மகிழ்கிறார்கள் ....

காதல்
மொழி
வாய் இருப்பவர்கள்
பேசி சிரிக்கிறார்கள் ......

காதல்
இரவு
உன்னை எழுப்பிவிட்டு
அது
தூங்கி போய்விடும் ......

காதல்
நிலவு
கவிதைகளை
கடன் வாங்கும் .....

கல்லறை அதிசயமாய்
இருப்பதனால் தான்
என்னவோ
இங்கே தான்
காதலுக்கு அதிக
கல்லறைகள்
கட்டப்படுகின்றன ....

No comments:

Post a Comment