Wednesday, October 27, 2010

காதல் தீபாவளி

ஒரு
பூக்கடை
வெடிகடைக்கு போகிறது.
நீ
வெடி வாங்கப்போனதை
நான்
வேறுஎப்படி சொல்லமுடியும் ...

நெருப்பையும்
சிரிப்பையும்
வைத்துக்கொண்டு
நீ
கொளுத்திப்போட்ட பட்டாசுகளில்
முதலில் வெடித்தது நான்தான்..............

தீபாவளி
வந்துவிட்டது
வழக்கம்போல்
நீ
எச்சில் செய்த
பலகாரத்தை மட்டும்
எனக்கனுப்பு
அதுபோதும் எனக்கு ..............

பண்டிகை அன்று
நீ
கோவிலுக்கு போனால்
பாவம் கடவுள்
எல்லா வகையிலும்
நிராகரிக்கப்படுகிறார்..


கடைசியில்
கம்பிமத்தாப்பு
புஷ்வானம் கொளுத்தி
பூரித்து சிரிக்கையில்
என்
அடுத்த வருடத்திற்கான
தீபாவளி கனவுகள்
அங்கேயே தொடங்குகின்றன ................

No comments:

Post a Comment