உன்னை தேடி தேடி
தென்றலும்
நானும்
ஓய்ந்தே
போய் விட்டோம் .......
ஊரில் உள்ள
எல்லோரையும்
பார்த்தாகிவிட்டது
உன்னை தவிர ...............
பூகடைகாரர்கள்
உன்னை நம்பிதானே
திருவிழாவிற்கு
கடை போட்டார்கள் ..........
யார் வந்தால் என்ன
நீ வந்தால் தானே
திருவிழா .......
உனக்காய்
காத்திருந்ததில்
ஒரே ஒரு
கவிதை தான் மிச்சம் .............
ஆனால்
அது
உன் அளவு இல்லைடி .............
எங்கே எனது கவிதை ............
No comments:
Post a Comment