நீ வந்த பிறகு
என்
வானம்
இன்னும் அழகானது
உன் லிப்ஸ்டிக் பூசி கொண்டு ......
நீ வந்த பிறகு
எல்லாம்
தலைகீழ் ஆனது
நானும் கவிதை எழுதுகிறேன் ........
நீ வந்த பிறகு
கொஞ்சமாய் பேசுகிறேன்
ஆனால்
நிறைய சிரிக்க வேண்டி இருக்கிறது .......
நீ வந்த பிறகு
எதிர்த்தே பேசுவதில்லை
ஏனோ யார் பேசுவதும்
என் காதில் விழவேயில்லை ........
நீ வந்த பிறகு
எதையுமே மறப்பதில்லை
உன்னை தவிர
வேறு எதையும்
நினைத்தால் தானே மறப்பதற்கு ........
No comments:
Post a Comment