நீ
கொடுத்த
முத்தத்தின் ஈரம்
காய்வதற்குள்
இன்னுமொரு முத்தம் கொடு ....
உன்
முத்தங்களின் வாசம்
கன்னத்தில்
ஆரம்பித்து
கவிதையில்
முடிகிறது...............
உன்
முத்தத்தின் நீளத்தில்
உதடுகள்
தொலைந்து
போகின்றன ...........
நீ
ஆயிரம் முத்தம்
கொடுத்திருக்கலாம்
ஆனால் அந்த
முதல் முத்தத்தின் வாசம்
இன்னும்
உயிரோடு இருக்கிறது
உதடோரம் ............
முத்தங்கள்
பரிசுகள்
தயவு செய்து
யாரிடமும்
கேட்டு வாங்காதீர்கள் ...........
முத்தங்கள்
ரகசியங்கள்
உதட்டோடு
உதடு
பரிமாறி கொள்ளுங்கள் ........
கண்ணை
மூடிக்கொண்டு
படிக்ககூடிய
ஒரே கவிதை
முத்தம் ........
No comments:
Post a Comment